உலகின் முதல் டெக்ஸட் மெசேஜை பெற்ற நெட்வொர்க் நிறுவனம் எது தெரியுமா?

Updated: திங்கள், 4 டிசம்பர் 2017 (20:42 IST)
உலகின் முதல் எஸ்எம்எஸ் அனுப்பப்பட்டு இன்றோடு 25 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. ஆம், டெக்ஸட் மெசேஜ்களுக்கு இன்றோடு 25 ஆண்டுகள் ஆகி விட்டதாம். 
 
உலகின் முதல் மெசேஜ் கணினியில் இருந்து வோடபோனுக்கு தான் அனுப்பப்பட்டதாம். 1992 ஆம் ஆண்டு, நெயில் பாப்வொர்த் என்ற பொறியாளர் தன்னுடைய நண்பருக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்தை மெசேஜ் மூலம் அனுப்பியுள்ளார். இதுதான் முதல் டெக்ஸ்ட் மெசேஜ்.
 
இதற்கு பின்னர், நோக்கியா மொபைல் 1993 ஆம் ஆண்டு, தன்னுடைய மொபைலில், மெசேஜ் வசதியை கொண்டு வந்தது. வோடபோன் நிறுவனம் 1980-களில் வந்துள்ளது.
 
முதல் மெசேஜ் அனுப்பிய பாப்வொர்த் இது குறித்து கூறியதாவது, உலகில் முதன் முதலாக நான் தான் மெசேஜ் அனுப்பியதாக கருதி மகிழ்ச்சியடைவேன். மேலும், இன்று மெசேஜ், எமோஜி என்பது இவ்வளவு பிரபலமாக மாறும் என்பது அப்போது எனக்கு தெரியாது. இதற்கு இவ்வளவு சக்திகள் இருப்பது ஆச்சரியம் என தெரிவித்துள்ளார்.

எல்லாம் காட்டு

டாஸ்மாக்கில் கூடுதல் விலைக்கு விற்றால் வேலை காலி!.. 10 ஆயிரம் அபராதம்...

டெல்லியில் போராடும் மாணவர்கள்!. ரூ.67,734க்கு பீட்சா அனுப்பிய இளைஞர்!.. நெகிழ்ச்சி செய்தி!..

வீட்டின் முன்பு மாந்திரீக பூஜை!.. ஜிபி முத்து மீது தாக்குதல்!...

நாளை வரை அவகாசம் கேட்ட பாஜக!.. தர்மேந்திர பிரதான் பதவி பறிக்கப்படுமா?...

லண்டன் ஓட்டலில் மர்மமாக உயிரிழந்த சவுதி இளவரசர்.. 8 மாதம் கழித்து வந்த பிரேத பரிசோதனை அறிக்கையில் அதிர்ச்சி தகவல்..

அடுத்த கட்டுரையில்
Show comments