ஆழ்கடலில் ஐபோன் நோட்டிஃபிகேஷன்: ஸ்கூபா டைவரின் வியப்பான அனுபவம்!

செவ்வாய், 17 ஜூலை 2018 (14:42 IST)
ஆப்பிள் ஐபோனின் தரம் உலகம் அறிந்த ஒன்று. ஆப்பிள் ஐபோன் வெளியாவதற்கு முன் இவை பல சோதனைகளுக்கு உட்படுத்தப்படுகின்றன. அதேபோல், பாதுகாப்பு அம்சங்களிலும் ஐபோன் சிறந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது. 
 
அந்த வகையில் ஸ்கூபா டைவரின் ஐபோன் அனுபவம் விபப்பை அளித்துள்ளது. கனடா நாட்டு சுற்றுலா பயணி ஒருவர், இங்கிலாந்து சென்றிருந்த போது, கடலில் படகு சவாரி செய்த போது அவரது ஐபோன் 7 ஸ்மார்ட்போன் கடலில் விழுந்து விட்டது. 
 
கடலில் விழுந்தது எப்படி எடுப்பது என தெரியாமல், அவர் கனடாவிற்கு சென்றுவிட்டார். இதே கடற்பகுதிக்கு இரண்டு நாட்கள் கழித்து ஸ்கூபா டைவின் சென்று ஆழ்கடலில் ஏதோ மின்விளக்கு மிளிர்வதை கண்டார். 
 
அதன் அருகில் சென்று பார்த்த போது, குறுந்தகவல் நோட்டிஃபிகேஷன் பெற்ற ஐபோன் 7 இருந்துள்ளது. கடலில் விழுந்து இரண்டு நாட்கள் ஆன பின்னரும் ஐபோன் 7 ஸ்மார்ட்போனில் 84% சார்ஜூடன் சீராக இயங்கியதோடு, அதில் நெட்வொர்க் சீராக இருந்ததால் குறுந்தகவல் ஒன்றும் வந்திருந்தது. 
 
மேலும், அந்த ஐபோனை அவரது உரிமையாளரிடமே கொண்டு சேர்த்துள்ளார் அந்த ஸ்கூபா டிரைவர்.

எல்லாம் காட்டு

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டிருந்தவர் இன்று சென்னை காவல் ஆணையர்.. அதிரடி உத்தரவு..!

ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தால் தனியார் மருத்துவமனைக்கு அனுமதி: மருத்துவதுறை அமைச்சர் அருண்ராஜ்

முதலமைச்சர் விஜய் அய்யா.. நீங்க தான் எங்க பிள்ளைகளை காப்பாத்தனும்.. இலங்கை சிறையில் இருக்கும் மீனவரின் தாய் கண்ணீர்..!

ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டிக்கு புதிய பதவி.. முதலமைச்சர் விஜய் முடிவு?

தவெக அமைச்சரவை மேலும் நீட்டிப்பு!.. 2 எம்.எல்.ஏக்கள் இன்று அமைச்சர்களாக பதவியேற்பு!..

அடுத்த கட்டுரையில்
Show comments