திக்குமுக்காடும் பிஎஸ்என்எல்: ஒரே மாதத்தில் 40 லட்சமா?

புதன், 4 ஏப்ரல் 2018 (16:57 IST)
தொலைத்தொடர்பு துறையில் ஜியோ நுழைந்தது முதல் மற்ற நிறுவனங்கள் சரிவை சந்தித்து வருகின்றனர். மேலும், தங்களது வாடிக்கையாளர்களை தக்கவைத்துக்கொள்ள சலுகைகலை வழங்கி வருகின்றன. 
 
இந்நிலையில், பிஎஸ்என்எல் நிறுவன சேவையில் கடந்த மார்ச் மாதம் மட்டும் சுமார் 40 லட்சம் பேர் இணைந்திருப்பதாக பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது. 
 
இதில் போர்டபிலிட்டி சேவையின் கீழ் மட்டும் சுமார் 12 லட்சம் பேர் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் இந்த மாதம் அதிக அளவு பிஎஸ்என்எல் சேவையை ஏன் தேர்வு செய்துள்ளனர் என்றும் காரணம் வெளியிடப்பட்டுள்ளது. 
ஆம், புதிய சலுகைகள் மற்றும் கூடுதல் சேவைகளின் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறதாம். இடையில் ஏர்செல் சேவை முடங்கியதாலும் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் சேவையில் இணைந்தனர்.
 
மேலும், டெலிகாம் சூழலுக்கு ஏற்ப கவர்ச்சிகர சலுகைகள் தொடர்ந்து அறிவிக்கப்படும் என பிஎஸ்என்எல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

எல்லாம் காட்டு

அமைச்சரவையில் காங்கிரஸ்!. அழைப்புவிடுத்த தவெக!.. கிரிஷ் சோடங்கர் பேட்டி...

ஜீரோ ஊழல்!.. ஜீரோ கமிஷன்!.. தலைவர் சொல்லிட்டாரு!.. ஆதவ் அர்ஜுனா பேட்டி!..

வீட்டிலிருந்து கோட்டைக்கு 17 கி.மீ!.. டிராப்பிக்கில் தவிக்கும் சாமானியர்கள்!.. வீடு மாறுவாரா விஜய்?...

டில்லியில் மீண்டும் ஒரு நிர்பயா சம்பவம்!.. திருமணமான பெண் பேருந்தில் பாலியல் வன்கொடுமை!..

திருச்சி கிழக்கு சட்டமன்ற தொகுதி காலி.. தமிழ்நாடு அரசிதழில் வெளியீடு.. தேர்தல் எப்போது?

அடுத்த கட்டுரையில்
Show comments