Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பழையனவற்றை கழித்து புதியனவற்றை புகுத்தும் போகி பண்டிகை !!

Written By Sasikala
Updated: வெள்ளி, 8 ஜனவரி 2021 (12:44 IST)

பழையன கழிதல்பொங்கல் பண்டிகைக்கு முதல்நாள் போகி பண்டிகை கொண்டாடப்படுகிறது. நெடுங்காலமாக இந்த போகி திருநாளில் பழைய பொருட்களை  எரிக்கும் பழக்கம் மக்களிடையே இருந்து வருகிறது.

தேவையில்லாத குப்பைகளை போகி பண்டிகை அன்று சூரிய உதயத்திற்கு முன்னதாக வீட்டு வாசலின் முன்பாக, வீட்டில் இருக்கும் தேவை இல்லாத பழைய துடைப்பம் போன்ற குப்பைகளை தீயிட்டு கொளுத்தி விடுவார்கள். இதனால் வீட்டில் இருக்கும் திருஷ்டி கழியும்  என்பது ஒரு ஐதீகம்.
 
பிறகு வீட்டின் வாசலில் அழகான கோலம் போடவேண்டும். பித்ரு பூஜைபோகி தினத்தன்று பித்ருக்கள் நம் இல்லத்திற்கு வருவதாக சாஸ்திரம் சொல்கிறது.  அதனால் அவர்களுக்கு பிடித்த உணவை படைத்து, தேங்காய், வெற்றிலை, பாக்கு, வாழை பழம் வைத்து தீப ஆராதனை செய்து வணங்க வேண்டும்.
 
பொங்கலுக்கு முன்னரே வீட்டை வெள்ளையடித்துச் சுத்தம் செய்வார்கள். அப்போது தேவையற்ற பழைய பொருட்களை ஓரத்தில் ஒதுக்கி வைப்பார்கள். போகியன்று அந்தப் பழைய பொருட்களைத் தீயிலிட்டுக் கொளுத்துவது வழக்கம். அப்போது குழந்தைகள், சிறு பறை கொட்டிக் குதூகலிப்பர்.
 
போகி அன்று வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்றபொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும், தவறான எண்ணங்களும் நீக்கப்படவேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும்.

அடுத்த கட்டுரையில்
Show comments