தோனியை சி எஸ் கே அணி தக்கவைக்குமா?... ஏலத்தில் விடுமா? – புதிய குழப்பம்!

vinoth
செவ்வாய், 4 ஜூன் 2024 (07:40 IST)
நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் சி எஸ் கே அணி தங்கள் கடைசி லீக்  போட்டியில் ஆர் சி பி அணியிடம் 27 ரன்கள் வித்தியாசத்தில் தோற்று ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. இந்த போட்டியில் சி எஸ் கே அணியின் மிகச்சிறந்த பினிஷரான தோனி இருந்த போதும் அவரால் அணியை வெற்றி பெற வைக்க முடியவில்லை. இந்த போட்டி முடிந்த போது மிகவும் அதிருப்தியோடு காணப்பட்டார். அவர் அணி வீரர்களோடு கூட அதிகமாக எதுவும் பேசவில்லை என சொல்லப்படுகிறது.

உடனடியாக சொந்த ஊருக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இங்கிலாந்துக்கு அறுவை சிகிச்சைக்கு செல்ல உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் அடுத்த சீசனில் தோனி விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆனால் சி எஸ் கே அணி நிர்வாகிகள் அவர் விளையாடுவார் என்றே உறுதியாகக் கூறுகின்றனர்.

இந்நிலையில் அடுத்த சீசனுக்கு மெகா ஏலம் நடக்கவுள்ள நிலையில் ஒவ்வொரு அணியும் மூன்று வீரர்களை மட்டுமே தக்கவைக்க முடியும். ஏலத்தில் விடப்படும் வீரர்களில் ஒருவரை வேறு அணி எடுத்தால் அதை ரைட் டூ மேட்ச் என்ற முறையில் அவர்கள் எடுத்த தொகைக்கு வாங்கிக் கொள்ளலாம். இப்படி ஒரு நிலையில் தோனியை சிஎஸ் கே அணி தக்கவைக்குமா அல்லது ஏலத்தில் விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேளை தக்கவைத்தால் தோனி அடுத்த மூன்று சீசன்களுக்கு விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments