எத்தன வயசானாலும் சிங்கம் சிங்கம்தான்… நான்கு ரன்கள் ஓடியே எடுத்த கோலி!

vinoth
திங்கள், 21 ஏப்ரல் 2025 (08:45 IST)
நேற்று நடந்த முதல் போட்டியில் பஞ்சாப் மற்றும் பெங்களூரு ஆகிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்த ராயல் சேலஞ்சர்ஸ் அணி பஞ்சாப் அணியை 157 ரன்களுக்குள் சுருட்டியது. பஞ்சாப் அதிரடியாக தொடங்கினாலும் அந்த அணி ஒரு கட்டத்தில் விக்கெட்களை இழக்க பெரிய இலக்கை நிர்ணயிக்க முடியவில்லை.

இதையடுத்து ஆடிய பெங்களூரு அணி இலக்கை எளிதாக எட்டியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி 54 பந்துகளில் 73 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதைப் பெற்றார். இந்த போட்டியில் விராட் கோலி தேவ்தத் படிக்கல் அடித்த ஒரு பந்துக்கு ஓடியே நான்கு ரன்கள் சேர்த்தார். 36 வயதில் ஒரு இளம் வீரருக்கு நிகராக கோலி நான்கு ரன்கள் சேர்த்தது பாராட்டுகளைப் பெற்று வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஒரு போட்டியில் கோலி ரன் ஓடும்போது மூச்சுவாங்கி, அருகில் இருந்த சஞ்சு சாம்சனை தன்னுடைய இதயத்துடிப்பை சோதிக்க சொன்னார். அது சம்மந்தமானக் காட்சிகள் வெளியான போது கோலிக்கு வயசாகிவிட்டது என்றெல்லாம் ரசிகர்கள் பரிதாபப்பட தொடங்கினர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த செயலின் மூலம் கோலி தான் இன்னும் அதே இளமையோடும் உத்வேகத்தோடும் இருப்பதாகப் பதிலளித்துள்ளார். 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments