இது நீண்ட உறவின் தொடக்கம்… இளம் வீரர் குறித்து சென்னை அணிப் பயிற்சியாளர் கருத்து!

vinoth
திங்கள், 5 மே 2025 (07:37 IST)
நடப்பு ஐபிஎல் தொடர் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பரிதாபகரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி முதல் அணியாக ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது. பாதியிலேயே தொடரில் இருந்து ருத்துராஜ் வெளியேறிய நிலையில் மீண்டும் கேப்டன் பொறுப்பேற்ற தோனியாவது அணியைக் கரைதேற்றுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவராலும் பெரியத் தாக்கத்தை செலுத்தி அணியை வெற்றிப் பாதைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.

மொத்தம் 11 போட்டிகளில் விளையாடியுள்ள சி எஸ் கே இரண்டில் மட்டுமே வெற்றி பெற்று கடைசி இடத்தில் உள்ளது. ஆனால் இந்த முறை அணியின் சிறந்த கண்டுபிடிப்பாக ஆயுஷ் மாத்ரே கவனம் பெற்றுள்ளார். அணிக்குள் கடைசி நேரத்தில் மாற்று வீரராக வந்த அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

ஆயுஷ் மாத்ரே பற்றி பேசியுள்ள சென்னை அணித் தலைமைப் பயிற்சியாளர் ஸ்டீபன் ஃபிளமிங் “ஆயுஷ் மாத்ரே, நாங்கள் எதிர்பார்க்கும் நவீன டி 20 பேட்ஸ்மேனுக்கான அனைத்தையும் பெற்றுள்ளார். பெரிய லீக் தொடர்களில் தன்னை சிறப்பாக வெளிப்படுத்தும் தன்மை, எங்களைக் கவர்ந்துள்ளது.  இது ஒரு நீண்டகால உறவின் தொடக்கம் என நினைக்கிறேன்” எனக் கூறி, ஆயுஷ் மாத்ரே சி எஸ் கே அணியில் நீண்டகாலம் விளையாடவுள்ளார் என்பதைக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments