ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் ப்ளேயராக களமிறங்கும் ரிஷப் பண்ட்?

செவ்வாய், 12 டிசம்பர் 2023 (06:53 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் இப்போது அவர் அடுத்த சீசனில் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்காக களமிறங்குவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் அவர் இம்பேக்ட் ப்ளேயராக களமிறக்கப்படுவார் என சொல்லப்படுகிறது. இதனால் அவர் பேட்டிங் மட்டும் செய்ய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. ஆனால் அவர் கேப்டனாகவே அடுத்த சீசனில் விளையாடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
 

எல்லாம் காட்டு

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அடுத்த கட்டுரையில்
Show comments