ரிஷப் பண்ட் சி எஸ் கே அணிக்கு ஆடினாலும் ஆச்சர்யப்பட வேண்டாம்… முன்னாள் வீரர் பற்ற வைத்த நெருப்பு!

திங்கள், 4 டிசம்பர் 2023 (07:28 IST)
இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.

தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். இந்நிலையில் முன்னாள் வீரரான தீப்தாஸ் குப்தா ரிஷப் பண்ட் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடுவார் என கூறியுள்ளார்.

இதுபற்றி பேசியுள்ள அவர் “தோனி ரிஷப் பண்ட்டை சென்னை அணிக்கு அழைத்து வந்தாலும் வருவார். இருவரும் மிகவும் நெருக்கமாக இருக்கிறார்கள். ரிஷப் பண்ட் தோனியை மிகவும் நேசிக்கிறார்கள். இருவர்களது சிந்தனையும் ஒத்திருக்கிறது” எனக் கூறியுள்ளார். தோனி 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரோடு ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு சி எஸ் கே அணியை யார் வழிநடத்துவார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

எல்லாம் காட்டு

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

முதல்முறையாக சென்னையில் ஆஸ்திரேலியாவின் புகழ்பெற்ற பிக் பாஷ் டி20 லீக் போட்டி.. கிரிக்கெட் ரசிகர்கள் குஷி..!

தொடர்ச்சியாக 5 போட்டிகளில் தோல்வி.. பஞ்சாப் அணியின் கேப்டன் ஸ்ரேயஸ் ஐயர் கூறும் காரணம் என்ன தெரியுமா?

கேப்டன் ஆனார் திலக் வர்மா.. முத்தரப்பு தொடருக்கு இந்திய அணி அறிவிப்பு..

அடுத்த கட்டுரையில்
Show comments