கடசில நாங்கதான் ஐபிஎல் கோப்பையை வாங்கிக் கொடுக்கனும் போல… ப்ளே ஆஃப்க்கு தகுதிபெற்ற மகளிர் RCB அணி!

vinoth
புதன், 13 மார்ச் 2024 (09:32 IST)
எவ்வளவோ திறமையான வீரர்கள் ஆர் சி பி அணிக்குள் வந்தும், கோலி போன்றவர்கள் திறமையாக அணியை வழிநடத்தியும், இன்னும் ஒருமுறை கூட அந்த அணிக் கோப்பையை வெல்லவில்லை. சில முறை பைனல் வரை சென்றும், அதிக முறை ப்ளே ஆஃப் வரை சென்றும் இன்னும் ஆர் சி பி யால் கோப்பையை வெல்ல முடியவில்லை. இது அந்த அணியின் மேல் ஒரு கரும்புள்ளியாகவே உள்ளது.

இந்நிலையில் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட மகளிர் ஐபிஎல் தொடரில் களமிறங்கிய ஆர் சி பி அணி நம்பிக்கை அளிக்கும் விதமாக கலக்கி வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அந்த அணி நேற்று மும்பையை எதிர்கொண்டு அந்த போட்டியில் வெற்றி பெற்றது. இதன் மூலம் ஆர் சி பி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

ஸ்ருதி மந்தனா தலைமையில் விளையாடி வரும் ஆர் சி பி அணி இந்த ஆண்டு ஐபிஎல் கோப்பையைக் கைப்பற்றும் என ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கின்றனர். டெல்லி கேப்பிடல்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் ஆகிய அணிகள் தகுதி பெற்றுள்ளன

எல்லாம் காட்டு

இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது அர்ஜென்டினா: மெஸ்ஸியின் அசாத்திய ஆட்டம்!

அணியில் இருந்து நீக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ்.. மீண்டும் திரும்ப வேண்டுமானால் கடுமையான நிபந்தனைகள்....

சிஎஸ்கே அணியில் இருந்து திடீரென விலகிய ஸ்டீபன் பிளமிங்.. என்ன காரணம்?

இந்தியாவின் தொடர் தோல்வி.. 4வது டி20 போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்...

கிரிக்கெட் மேட்ச்!.. ஆணுறை விளம்பரங்களை தடை பண்ணுங்க!.. வலுக்கும் கோரிக்கை!...

அடுத்த கட்டுரையில்
Show comments