Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐபிஎல் 2024: பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணிக்கு புதிய ஹோம் கிரவுண்ட்!

Written By vinoth
Updated: திங்கள், 1 ஜனவரி 2024 (10:01 IST)
ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஆரம்பித்ததில் இருந்து விளையாடி வரும் பஞ்சாப் கிங்ஸ் லெவன் அணி இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை. ஆனால் பலமுறை சிறப்பாக விளையாடி சில முறை இறுதிப் போட்டிக்கு கூட தேர்வாகியுள்ளது.

இதையடுத்து அந்த அணி நிர்வாகம் பல முறை கேப்டன்களையும் வீரர்களை மாற்றிப் பார்த்தது. ஆனால் இதுவரை அந்த அணியின் கோப்பைக் கனவு பலிக்கவில்லை. இந்நிலையில் ஐபிஎல் 2024 தொடரில் பஞ்சாப் அணியின் ஹோம் கிரவுண்ட் மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பஞ்சாப் மாநிலம் முல்லான்பூரில் 230 கோடி ரூபாய் செலவில் புதிய ஸ்டேடியம் திறக்கப்பட்டுள்ளது. மொஹாலி மைதானத்தை விட இந்த மைதானத்தில் அதிக ரசிகர்கள் அமர்ந்து பார்க்கும் விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளதால் இந்த மைதானத்தை பஞ்சாப் கிங்ஸ் அணியின் ஹோம் கிரவுண்டாக மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

எல்லாம் காட்டு

2027ஆம் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கும் தேதி.. ஐசிசி மாஸ்டர் பிளான்..

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்.. அடித்து விளையாடும் வங்கதேசம்.. விட்டா ஜெயிச்சிடும் போல...

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டி.. ஆர்.அஸ்வின் கணித்த உத்தேச அணி வீரர்கள் பட்டியல்..

டிவி ரியாலிட்டி நிகழ்ச்சியில் ரோஹித் சர்மா.. இனி கிரிக்கெட் அவ்வளவு தானா?

ஐபிஎல் டெல்லி கேபிடல்ஸ் பிளேயர் கைது.. மருத்துவ மாணவிக்கு பாலியல் வன்கொடுமை?..

அடுத்த கட்டுரையில்
Show comments