இங்கிலாந்து மோசமான கிரிக்கெட்டை ஆடி வருகிறது… முன்னாள் கேப்டன் வேதனை!

வெள்ளி, 27 அக்டோபர் 2023 (06:56 IST)
பெங்களூருவில் நேற்று நடந்த உலகக்கோப்பைப் போட்டியின் லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து அணியை, 8 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி தோற்கடித்தது. இதன் மூலம் இந்த தொடரில் நான்காவது தோல்வியைப் பதிவு செய்துள்ளது இங்கிலாந்து அணி. இதனால் அந்த அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட காலியாகியுள்ளது. இதுவரை 5 போட்டிகளில் விளையாடியுள்ள இங்கிலாந்து அணி ஒரு வெற்றி மட்டுமே பெற்றுள்ளது.

இதையடுத்து நடப்பு சாம்பியனான இங்கிலாந்து அணியை அந்த நாட்டு பல முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடி வருகின்றனர். அதில் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாஹனும் ஒருவர். அவர் தன்னுடைய அதிருப்தியை “இது இங்கிலாந்து கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான உலகக் கோப்பை பிரச்சாரங்களில் ஒன்றாக மாறி வருகிறது” என எக்ஸ் தளத்தில் தன்னுடைய வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

எல்லாம் காட்டு

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

29 பந்துகளில் 94 ரன்கள்.. 10 பவுண்டரிகள், 8 சிக்ஸர்கள்.. ருத்ரதாண்டவம் ஆடிய வைபவ் சூர்யவன்ஷி...

சுப்மன் கில், இஷான் கிஷான்.. ரெண்டு பேருமே சதம்.. ஆப்கன் அணிக்கு எதிராக அதிரடி காட்டிய இந்தியா...

இந்திய வீராங்கனையை அடித்தாரா பாகிஸ்தான் பந்துவீச்சாளர்.. இணையத்தில் பரவும் அதிர்ச்சி வீடியோ

உலக கோப்பையில் விளையாட விடாமல் சதி செய்தது எங்கள் நாட்டு கிரிக்கெட் போர்டு.. வங்கதேச கேப்டன் பகீர் புகார்..

அடுத்த கட்டுரையில்
Show comments