சச்சின், கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின்… கபில் தேவ் ஆதங்கம்!

vinoth
வெள்ளி, 20 டிசம்பர் 2024 (09:31 IST)
ஆஸ்திரேலிய தொடருக்கு நடுவே தோனி போலவே அஸ்வினும் ஓய்வை அறிவித்து பரபரப்பை உருவாக்கினார் அஸ்வின். டெஸ்ட் தரவரிசையில் பவுலராகவும் ஆல்ரவுண்டராகவும் முதல் ஐந்து இடங்களுக்குள் இருக்கும் அஸ்வினை வெளிநாட்டு  தொடர்களின் போது அணி நிர்வாகம் ஒரு அறிமுக பவுலரைப் போல பென்ச்சில் உட்கார வைக்கின்றனர். அடுத்த இரண்டு போட்டிகளிலும் அவருக்கு வாய்ப்பு இருக்காது என அணி நிர்வாகம் தெரிவித்த பின்னர்தான் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இதே கருத்தை அஸ்வினின் தந்தை ரவிச்சந்திரனும் வெளிப்படுத்தியிருந்தார். அவர் “இந்த முடிவை நாங்கள் எதிர்பார்த்துதான் இருந்தோம். ஏனென்றால் அணிக்குள் அவர் கடந்த சில மாதங்களாக சில அவமானங்களை சந்தித்தார்” எனக் கூறியிருந்தார். ஆனால் அதை அஸ்வின் மறுத்துள்ளார்.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் இதுகுறித்து பேசும்போது “இந்திய அணியின் ஜாம்பவான்களான சச்சின் மற்றும் கவாஸ்கருக்கு நிகரானவர் அஸ்வின். அவர் ஓய்வை அறிவிக்கும்போது நான் இருந்திருந்தால் அவரை இப்படி அனுப்பியிருக்க மாட்டேன். அவருக்கு உரிய மரியாதை கொடுத்து மகிழ்ச்சியுடன் அனுப்பி இருப்பேன்” எனக் கூறியுள்ளார். 

எல்லாம் காட்டு

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

சிஎஸ்கேவுக்கு இன்று கடைசி லீக் போட்டி.. ஜெயித்தாலும் பிளே ஆஃப் செல்ல முடியுமா?

வைபவ் சூர்யவன்ஷியின் வரலாற்றுச் சாதனை: கிரிக்கெட் உலகமே வியப்பு!

அடுத்த கட்டுரையில்
Show comments