Daily Horoscope

பயிற்சியின் போது காயமடைந்த முன்னணி வீரர்… இந்திய அணிக்குப் பின்னடைவு!

Written By vinoth
Updated: ஞாயிறு, 22 டிசம்பர் 2024 (08:23 IST)
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் தொடரை வெற்றியோடு தொடங்கிய இந்திய அணி அதன் பிறகு சொதப்ப ஆரம்பித்துள்ளது. இரண்டாவது டெஸ்ட்டில் தோல்வியடைந்து மூன்றாவது டெஸ்ட்டில் போராடி டிரா செய்தது.

இதையடுத்து மெல்போர்னில் அடுத்த டெஸ்ட் போட்டி பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளது. இதற்காக இரு அணிகளும் தற்போது தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பயிற்சியின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் ஒருவரான கே எல் ராகுல் வலது கையில் காயமடைந்துள்ளதாக சொல்லப்படுகிறது. பாக்ஸிங் டே போட்டிக்கு இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில் அவரின் காயம் இந்திய அணிக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது. பார்டர் கவாஸ்கர் தொடரில் இந்திய அணிக்காக அதிக ரன்கள் சேர்த்த வீரராக கே எல் ராகுல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

வைபவ் சூர்யவன்சி அணியில் இல்லையா? என் மனைவியே கேள்வி கேட்டார்: ஸ்ரீகாந்த் விமர்சனம்..

பாகிஸ்தான் அமைச்சர் கையால் கோப்பையை வாங்க மறுத்த இந்திய மகளிர் அணி.. ஆசிய கோப்பை மைதானத்தில் பரபரப்பு..

மகளிர் ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர்.. 8 முறையாக இந்திய அணி சாம்பியன்..

இந்தியா - பாகிஸ்தான் மேட்ச் மிஸ்ஸிங்.. இந்தியா - இலங்கை இறுதிப்போட்டியில் மோதல்..!

சிஎஸ்கே அணியின் 25% பங்குகளை கேட்டாரா எம்.எஸ்.தோனி? சிஎஸ்கேவின் மதிப்பு ரூ.17200 கோடி.. அப்ப 25% எவ்வளவு?

அடுத்த கட்டுரையில்
Show comments