ஒரே டைம்ல ரெண்டு போட்டி..! இப்படி சொன்னா எப்படி? – ஐபிஎல் அறிவிப்பால் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: புதன், 29 செப்டம்பர் 2021 (08:45 IST)
ஐபிஎல் வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் போட்டிகள் அரபு அமீரகத்தில் பரபரப்பாக நடந்து வருகிறது. பொதுவாக வார இறுதி நாட்களில் ஒரே நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறும் நிலையில் மதியம் 3.30 மணிக்கு ஒரு போட்டியும், மாலை 7.30 மணிக்கு மற்றொரு போட்டியும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் இந்த லீக் ஆட்டத்தின் இறுதி ஆட்டம் அக்டோபர் 8ல் நடைபெற உள்ளது. அன்றைய தினம் நடைபெற உள்ள சன்ரைசர்ஸ் – மும்பை இந்தியன்ஸ் போட்டியும், ராயல் சேலஞ்சர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் போட்டியும் ஒரே நேரத்தில், அதாவது மாலை 7.30 க்கு நடைபெற உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.

இதனால் ஒரே நேரத்தில் இரண்டு போட்டிகள் நடந்தால் எந்த போட்டியை பார்ப்பது என ரசிகர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

எல்லாம் காட்டு

ஸ்பெயின் வீரர் போட்ட ஒரே ஒரு கோல்.. ஆபாச நடிகை மியா கலீஃபாவுக்கு ரூ. 6.27 கோடி லாபம்..

வலி அதிகமா இருக்கு!.. காயம் ஆறுவது கடினம்!.. மெஸ்ஸி உருக்கம்....

கோப்பையை வென்ற ஸ்பெயின் அணிக்கு இத்தனை கோடியா? குவியும் பரிசுமழை...

FIFA உலக கால்பந்து போட்டி!.. அர்ஜென்டினா கோட்டை விட்டது எங்கே?...

டி20 தொடரை அடுத்து ஒருநாள் தொடரையும் இழந்த இந்தியா.. ரசிகர்கள் அதிருப்தி..

அடுத்த கட்டுரையில்
Show comments