இலங்கையை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி

சனி, 29 ஜூலை 2017 (17:02 IST)
இலங்கையில் நடைப்பெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப்பெற்றது.


 

 
இந்திய அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. தற்போது 3 டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் காலே மைதானத்தில் நடைப்பெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 600 ரன்கள் குவித்து ஆல் அவுட் ஆனது.
 
இதைத்தொடர்ந்து விளையாடிய இலங்கை அணி முதல் இன்னிங்ஸில் 291 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இலங்கை அணிக்கு பாலோ ஆன் விழுந்தாலும் இந்தியா அணி தொடர்ந்து தனது 2வது இன்னிங்ஸை தொடங்கியது. 4வது நாளான இன்று இந்திய அணி 3 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. 
 
இதையடுத்து 550 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 245 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. இதனால் இந்திய அணி 304 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிப் பெற்றது.
 
முதல் இன்னிங்ஸில் தொடக்க ஆட்டக்காரர் தவான் மற்றும் புஜாரா சதம் அடித்தனர். இரண்டாவது இன்னிங்ஸில் கேப்டன் கோலி சதம் விளாசினார். ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் 6 விக்கெட் எடுத்துள்ளார். இலங்கை அணியில் பெரிரா இரண்டு இன்னிங்ஸிலும் இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் இருந்தார். முதல் இன்னிங்ஸில் 92 ரன்கள் குவித்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

எல்லாம் காட்டு

29 பந்தில் 97 ரன்கள்.. ஐதராபாத்தை அடித்து நொறுக்கிய வைபவ் சூர்யவன்ஷி... இறுதிக்கு தகுதி பெறுமா ராஜஸ்தான்?

80% மழைக்கு வாய்ப்பு.. இன்றைய போட்டி மழையால் ரத்தானால் இறுதிப்போட்டிக்கு செல்லும் அணி எது? எந்த அணிக்கு அதிர்ச்சி?

டிராவிட் ஹெட் மனைவிக்கு மிரட்டல் விடுத்த ஐபிஎல் ரசிகர்கள்...! அநாகரீகமான முறையில் விராத் ரசிகர்கள்?

வைபவ் மனது வைத்தால் பிளே ஆஃப் சுற்றுக்கு ராஜஸ்தான் செல்ல வாய்ப்பு.. இன்று மும்பையுடன் மோதல்..!

சிஎஸ்கே படுதோல்வி.. பிளே ஆஃப் வாய்ப்பு பறிபோனது.. அடுத்த சுற்றுக்கு செல்லும் 4 அணிகள் எவை எவை?

அடுத்த கட்டுரையில்
Show comments