இந்தியாவிற்கு நன்றியுள்ளவனாக இருப்பேன்! – ட்வெய்ன் ப்ராவோ உருக்கம்!

புதன், 8 டிசம்பர் 2021 (13:05 IST)
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வீரரான ட்வெய்ன் ப்ராவோ இந்தியா தனது வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி வீரரான ட்வெய்ன் ப்ராவோ பல்வேறு சர்வதேச ஒருநாள், டி20 உள்ளிட்ட போட்டிகளிலும் விளையாடியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளுக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏலத்தில் சிஎஸ்கே அணியிலிருந்து ப்ராவோ விடுவிக்கப்பட்டுள்ளார்.

எனினும் அவர் ஐபிஎல் ஏலத்தில் தொடர்ந்து இருப்பதால் சிஎஸ்கேவால் மீண்டும் ஏலத்திற்கு எடுக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவுடனான தனது அனுபவம் குறித்து பேசியுள்ள ட்வெய்ன் ப்ராவோ “இந்தியா என்னை ஒரு பிராண்ட் ஆக மாற்றியது. இந்தியா இன்றி என் மதிப்பு பாதியாகதான் இருந்திருக்கும். எனது வீட்டிலிருந்து வெகு தொலைவில் உள்ள நாட்டில் ஒரு பெரிய நிலையை கொண்டிருப்பதற்கு நான் எப்போதும் நன்றியுள்ளவனாக இருப்பேன். நிச்சயமாக இந்தியா என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது” எனக் கூறியுள்ளார்.

எல்லாம் காட்டு

ரொனால்டோவின் உலகக்கோப்பை கனவு தகர்ந்தது.. கடைசி நிமிடத்தில் கோல் அடித்து அசத்திய ஸ்பெயின்..

35 வருடங்களுக்கு பின் சீக்கிரம் வெளியேறிய பிரேசில் அணி.. விரக்தியில் ஓய்வு பெற்ற நெய்மார்...

அதிக சேம் சைடு கோல்கள்.. 2026 உலகக்கோப்பை கால்பந்து தொடரில் மோசமான சாதனை..!

ஒரு பெருமைமிகு சாதனை.. ஒரு மோசமான சாதனை.. வைபவ் சூர்ய வன்ஷியின் அறிமுக போட்டியில் நடந்தது என்ன?

அயர்லாந்திடம் தோல்வி அடைந்தது இந்திய அணி.. தொடரையும் அயர்லாந்திடம் இழந்த சோகம்..

அடுத்த கட்டுரையில்
Show comments