Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஏன் அணியில் ரோஹித் ஷர்மா இல்லை?... கேப்டன் பும்ரா அளித்த பதில்!

Written By vinoth
Updated: வெள்ளி, 3 ஜனவரி 2025 (07:24 IST)
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மோதும் பார்டர் கவாஸ்கர் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி இன்று சிட்னி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணிக் கேப்டன் பும்ரா முதலில் பேட் செய்யும் முடிவை எடுத்தார்.

அதையடுத்து பேட் ஆடவந்த இந்திய அணி உணவு இடைவேளையின் போது 3 விக்கெட்களை இழந்து 57  ரன்கள் சேர்த்து தடுமாறி வருகிறது. விராட் கோலி களத்தில் உள்ளார். இந்த போட்டியில் எதிர்பார்க்கப்பட்டது போலவே ரோஹித்ஷர்மா இடம்பெறவில்லை. அவரின் மோசமான ஆட்டத்திறனே அதற்குக் காரணம்.

இந்நிலையில் புதுக் கேப்டன் பும்ரா இது குறித்து டாஸின் போது பேசுகையில் “எங்கள் கேப்டன் ரோஹித் ஷர்மா இந்த போட்டியில் ஓய்வெடுத்துக் கொள்ள முடிவு செய்துள்ளார். இதை வைத்தே எங்கள் அணிக்குள் ஒற்றுமை இருப்பதை நீங்கள் அறிந்து கொள்ளலாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக கேப்டன் ரோஹித்துக்கும் பயிற்சியாளர் கம்பீருக்கும் இடையே பெரும் கருத்து வேறுபாடு நிலவுவதாக செய்திகள் வெளியாகின என்பது குறிப்பிடத்தக்கது.

எல்லாம் காட்டு

இந்தியாவின் வெற்றியை தடுத்த இலங்கை பேட்ஸ்மேனின் சதம்.. டிராவை நோக்கி செல்கிறதா?

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

அடுத்த கட்டுரையில்
Show comments