Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அர்ஜூன் டெண்டுல்கரை கடித்த நாய்! – லக்னோ மைதானத்தில் அதிர்ச்சி!

Written By Prasanth Karthick
Updated: செவ்வாய், 16 மே 2023 (11:42 IST)
இன்றைய ஐபிஎல் தொடரில் லக்னோ – மும்பை அணிகள் மோத உள்ள நிலையில் பயிற்சியில் இருந்த அர்ஜூன் டெண்டுல்கரை நாய் கடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐபிஎல் சீசனின் லீக் போட்டிகள் பரபரப்பாக நடந்து வரும் நிலையில் இன்று லக்னோ சூப்பர் ஜியண்ட்ஸ் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. லக்னோவின் எகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் இந்த போட்டி நடைபெற உள்ள நிலையில் லக்னோ, மும்பை அணி வீரர்கள் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று லக்னோ அணி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளது. அதில் லக்னோ அணி வீரர்களுடன் பேசும் அர்ஜூன் டெண்டுல்கர் தன்னை ஒரு தெரு நாய் இடது கையில் கடித்து விட்டதாக கூறியுள்ளார்.

சச்சின் டெண்டுல்கரின் மகனான அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்த சீசனில் அறிமுகமாகியுள்ள அர்ஜூன் டெண்டுல்கர் 4 போட்டிகளில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி சிறப்பாக விளையாடி வருகிறார். நாய் கடித்திருந்தாலும் இன்றைய போட்டியில் அவர் விளையாட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Edit by Prasanth.K

எல்லாம் காட்டு

இன்னிங்ஸ் வெற்றியை நோக்கி இந்தியா.. ஃபாலோ ஆன் ஆகி 2வது இன்னிங்ஸில்ம் விக்கெட்டுக்களை இழந்து வரும் இலங்கை...

ஃபாலோ ஆன் ஆகிடுமா இலங்கை.. இந்திய பந்து வீச்சாளர்கள் அபாரம்.. 2 பேட்ஸ்மேன்கள் சதம்...

கொழும்பு டெஸ்ட் போட்டியில் முக்கிய சாதனை செய்த சுப்மன் கில்.. குவியும் வாழ்த்துக்கள்..

டெஸ்ட் போட்டிக்கு தேற மாட்டாரா வைபவ் சூர்யன்வன்ஷி.. 6 பந்துகளில் 8 ரன்கள் எடுத்து அவுட்..

2027 உலக கோப்பை.. முன்னாள் வீரர் உத்தப்பாவின் கனவு அணியில் வைபவ் சூர்யவன்ஷி..

அடுத்த கட்டுரையில்
Show comments