முடியின் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய்யை எவ்வாறு தயாரிப்பது...?

புதன், 19 மே 2021 (23:28 IST)
முடி உதிர்தல் என்பது மிகவும் பொதுவான பிரச்சினை. ஆனால் இது விரக்திக்கு வழிவகுக்கும். எல்லாவற்றிற்கும் மேலாக, முடி உதிர்தல் விரைவில் முடி மெலிந்து போக வழிவகுக்கிறது மற்றும் இதனால் வழுக்கை புள்ளிகள் கூட தோன்றக்கூடும். 
 
இத்தகைய சூழ்நிலையில், நம் மயிர்க்கால்களின் ஆரோக்கியத்தை மீட்டெடுக்க ஒரு தீர்வை நாம் தேட வேண்டும் என்பது தெளிவாகிறது. இதற்கு விலையுயர்ந்த சிகிச்சைகள் அல்லது ஆடம்பரமான எண்ணெய்கள் தேவையில்லை.
Ads by 
 
தேவையானவை: ஒரு கை நிறைய, புதிய கறிவேப்பிலைகள், அரை கப் தேங்காய் எண்ணெய். 
 
செய்முறை: தேங்காய் எண்ணெய்யில் கறிவேப்பிலைகளை சேர்த்து, அது நன்கு கருகி, கருப்பான படிமங்களாக மாறும் வரை சூடுபடுத்தவும்; இதை செய்யும்  பொழுது மிகவும் கவனமாக இருக்க வேண்டும். கருப்பு படிமங்கள் ஏற்பட்டவுடன், எண்ணெயை சூடுபடுத்துவதை நிறுத்தி விடவும்.
 
சூடான எண்ணெய்யை ஆறவைத்து, வடிகட்டிக் கொள்ளவும். இந்த எண்ணெய்யை தலையில் தடவி, ஓரிரு நிமிடங்கள் மசாஜ் செய்யவும். தலையை ஒரு மணிநேரம் அப்படியே வைத்திருந்து, பின் வழக்கம் போல் தலையை கழுவவும். இவ்வாறு தயாரித்த எண்ணெய்யை, ஒரு காற்று புகாத புட்டியில் சேமித்து வைத்து  கொள்ளவும்.
 
வாரம் இருமுறை இதை பயன்படுத்தி வந்தால், நல்ல மாற்றங்கள் ஏற்படுவதை பார்க்கலாம். முடி வளர்ச்சியை மேம்படுத்தி, இள நரை ஏற்படுவதை தடுக்க கறிவேப்பிலைகள் உதவும்; இதில் பாஸ்பரஸ், இரும்பு, கால்சியம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி சத்துக்கள் நிறைந்துள்ளன.
 

எல்லாம் காட்டு

கோடை காலத்தில் வெயிலை சமாளிப்பது எப்படி?!.. சில ஈஸி டிப்ஸ்!...

7 நிமிடத்தில் புற்றுநோய் சிகிச்சை!.. ஒரு டோஸ் விலை என்ன தெரியுமா?...

ஏன் ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஆரோக்கியத் திட்டமிடல் அவசியமாகிறது?..

கரும்பு ஜூஸில் இவ்வளவு நன்மைகளா?.. வாங்க பார்ப்போ!ம்..

உங்கள் மொபைல் போனை பேண்டின் முன் பாக்கெட்டில் வைக்கிறீர்களா? விந்தணு உற்பத்தி பாதிக்கும்..

அடுத்த கட்டுரையில்
Show comments