Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட ஐந்து: இதனால் லாபமா? நஷ்டமா?

Written By Sugapriya Prakash
Updated: வெள்ளி, 3 பிப்ரவரி 2017 (10:34 IST)
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட 2017-18 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் சில அறிவிப்புகள் தவறவிடப்பட்டுள்ளன. 


 
 
# 5 மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் காரணமாக, பட்ஜெட்டில் சலுகை அறிவிப்புகள் ஏதும் பெருமளவு இல்லை.
 
# அரசின் மூலதனச் செலவுக்கான தொகை ஒதுக்கீடு எதிர்பார்த்தபடி இல்லை. பலதுறை சார்ந்த வளர்ச்சிகளில் கவனம் செலுத்தும் வகையில், கூடுதலாக அரசின் செலவுக்கு நிதி ஒதுக்கி இருக்கலாம். 
 
# பொதுத்துறை வங்கிகளுக்கு, மத்திய அரசு வழங்கும் மூலதன நிதியை மிகக் குறைவான தொகையை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.   இந்த ஆண்டு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ரூ.25,000 கோடி தொகை ஒதுக்கப்பட்ட நிலையில் பொதுத்துறை வங்கிகள் ஏமாற்றம் அடைந்துள்ளன.
 
# ஜிஎஸ்டி மசோதா எந்த தேதிக்குள் அல்லது எந்த மாதத்திற்குள் திட்டவட்டமாக, நடைமுறைக்கு வரும் என, பட்ஜெட்டில் கூறப்படவில்லை. 
 
# பொதுத்துறை நிறுவனங்களில், மத்திய அரசு நிர்வகித்து வரும் பங்குகளில், கணிசமான அளவை விற்பனை செய்து, ரூ.45,500 கோடி நிதி திரட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு பலன் கொடுக்கும் என தெரியவில்லை. 
 
# யுனிவர்சல் பேசிக் இன்கம் எனப்படும் எந்த ஊழியராக இருந்தாலும், உலகம் முழுவதும் ஒரே தரப்பு ஊதிய நிர்ணயம் செய்வதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. 

எல்லாம் காட்டு

இண்டர்வியூவுக்கு வர முடியாது.. வேலைக்கு விண்ணபித்த இளைஞரின் மெசேஜால் பரபரப்பு..

20 ஆண்டுகளுக்கு பின் கொல்கத்தா வரும் தஸ்லிமா நஸ்ரின்.. மேற்கு வங்க பாஜக அரசு வரவேற்பு..

எதிர்ப்பு காட்டிய திமுக!.. அந்த காட்சியை நீக்கிய பரிதாபங்கள் டீம்!..

கர்நாடகாவில் விஜய்யின் ஜனநாயகன் பேனரை கிழித்த கன்னடர்கள்.. தண்ணீர் திறக்க சொன்ன உத்தரவுக்கு எதிர்ப்பு..!

விஜய் போன்ற முதல்வர் எங்களுக்கு வேண்டும்.. விஜய்யே வந்தாலும் சந்தோஷம் தான்.. பீகார் விவசாயிகள்..

அடுத்த கட்டுரையில்
Show comments