1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 12 ஏப்ரல் 2020 (10:12 IST)

உலகளவில் அதிக பலி: இத்தாலியை முந்தியது அமெரிக்கா!

கடந்த சில நாட்களில் அதிகளவில் கொரோனா பலியை சந்தித்த அமெரிக்கா உலக அளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடாக மாறியுள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். கிட்டத்தட்ட அனைத்து நாடுகளிலும் கொரோனா பரவியுள்ளதால் பலி எண்ணிக்கை நாள் ஒன்றுக்கு ஆயிரக்கணக்கில் இருந்து வருகிறது.

உலகளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடான இத்தாலியில் பலி எண்ணிக்கை 19,468 ஆக உள்ள நிலையில், அமெரிக்காவில் 20,597 பேர் பலியாகியுள்ளனர். இதனால் உலக அளவில் அதிக உயிரிழப்புகளை சந்தித்துள்ள நாடாக அமெரிக்கா மாறியுள்ளது. 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் அமெரிக்காவில் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறார்கள்.