1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 14 மார்ச் 2021 (13:15 IST)

ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு! – மினசோட்டா போலீஸுக்கு உத்தரவு!

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவில் போலீசாரால் கொல்லப்பட்ட ஜார்ஜ் ப்ளாயிட் குடும்பத்திற்கு 196 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ம் ஆண்டு அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில் ஜார்ஜ் ப்ளாயிட் என்ற கருப்பினத்தவரை போலீஸார் மூர்க்கமாக நடத்தியதில் மூச்சு திணறி அவர் உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கு போலீஸே காரணம் என மக்கள் போராட தொடங்கிய நிலையில் இந்த போராட்டம் அமெரிக்காவின் பல மாகாணங்களுக்கு பரவியது.

இதுதொடர்பான வழக்கு அமெரிக்க நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் உயிரிழந்த ஜார் ப்ளாயிட் குடும்பத்திற்கு மினியா நகர காவல்துறை 196 கோடியை இழப்பீடாக வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.