திருச்சி - துபாய் இடையே பகல்நேர விமான சேவை
ஏர் இந்தியா விமானம் திருச்சி - துபாய் இடையே பகல் நேர சேவையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர், மலேசியா மற்றும் பல்வேறு நாடுகளுக்கு விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், திருச்சி - துபாய் இடையே ஏர் இந்தியா விமான நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இதுவரை, துபாயிலிருந்து தினமும் நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து, 1.55க்கு மீண்டும் துபாய் செல்கிறது. இந்த விமானத்தின் நேரம் தற்போது மாற்றப்பட்டுள்ளது.
அதன்படி, துபாயில் இருந்து திருச்சிக்கு பகல் 12.45 மணிக்கு வரும் விமானம், பயணிகளை இறக்கி விட்டு, பகல் 1.30 மணிக்கு துபாய் நோக்கி புறப்பட்டு செல்லும். இந்த நேர மாற்றம் வரும் டிசம்பர் 6 ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த சேவைக்கு பயணிகள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.