1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வியாழன், 14 ஜனவரி 2016 (12:30 IST)

இந்தோனேசியாவில் தீவிரவாத தாக்குதல்: 6 பேர் உயிரிழப்பு

இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே, தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.


 

 
இந்தோனேஷியா தலைநகர் ஜகார்த்தாவில் அதிபர் மாளிகை அருகே, உணவு விடுதிகளில் தாக்குதல் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
 
அங்கு, தீவிரவாதிகள் 6 குண்டுகளை வெடிக்கச் செய்தனர். இதைத் தொடர்ந்து, தீவிரவாதிகள் துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இந்த வெடிகுண்டு மற்றும் துப்பாக்கி சூடு சம்பவத்தில், இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
தீவிரவாதிகளின் தாக்குதலையடுத்து அந்தப் பகுதியில் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
 
பாதுகாப்பு படை - தீவிரவாதிகள் இடையிலான துப்பாக்கி சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. 
 
சண்டை நடந்துவரும், அப்பகுதியை பாதுகாப்பு படை சுற்றி வளைத்துள்ளதாக கூறப்படுகின்றது. இதனால் பொதுமக்கள் பெரிதும் அச்சமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.