1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 17 மார்ச் 2022 (08:43 IST)

இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி! – மூடப்படும் கேஸ் நிறுவனங்கள்!

இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் கேஸ் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளது மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இலங்கை அரசு கடந்த சில மாதங்களாக கரும் நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளது. அந்நிய செலவாணி இருப்பு இல்லாததால் பெட்ரோலிய இறக்குமதியில் பெரும் பிரச்சினை எழுந்துள்ளது. இதனால் பெட்ரோலிய பொருட்கள் விலை இலங்கையில் பல மடங்கு உயர்ந்துள்ளது.

பல இடங்களில் பெட்ரோல், டீசல் கிடைக்காததால் மக்கள் வாகனங்களை ஆங்காங்கே நிறுத்தி வைத்துள்ளனர். பல இடங்களில் அத்தியாவசியமான பொருட்களுக்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் மிகப்பெரும் கேஸ் சிலிண்டர் நிறுவனங்களான லிட்ரோ கேஸ் மற்றும் லாக்ஸ் கேஸ் ஆகிய நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் மக்கள் பெரும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.