1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: வெள்ளி, 7 ஜூன் 2019 (18:57 IST)

முத்தம் கொடுக்க மறுத்த ’ பெண்களுக்கு ‘சரமாரி குத்து ...

லண்டன் மாநகரத்தில் உள்ள கேம்டன் டவுனில் ஒரு பேருந்தில்  மெலானா கெய்மோட்( 28) என்ற பெண் தனது பெண் தோழியுடன் கடந்த மே 30 ஆம் தேதி சென்று கொண்டிருந்தார்.
அப்போது அப்பேருந்தில் பயணித்த ஆண்கள் சிலர்,இரு பெண்களை நெருங்கி பாலியல் தொந்தரவு மற்றும் சில்மிஷத்தில் ஈடுபட்டனர்.
 
மேலும் இருவரையும் ஓரினச் சேர்கையாளர்களை ஜோடி என்றும் கருதிய ஆண்கள், தங்களுக்கு முத்தம் தரும்படி கேட்டு, தவறாக நடந்துள்ளனர்.
 
ஆனால் தங்களுக்கு விருப்பம் இல்லை என்று சொல்லியும் கேட்காமல் தொடர்ந்து வற்புறுத்தி இரு பெண்களை தொல்லை செய்தனர்.
 
ஒருகட்டத்தில் பெண்களை பலமாக தாக்கி, முகத்தில் குத்தினர். இதில் இருவருக்கும் முகத்தில் ரத்தம் வழிந்தது.
 
பின்னர் இருவரும் அருகில் உள்ள காவல் நிலையத்திற்குச் சென்று புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவத்தன்று மதியன் 2:30மணிக்கு BST N31 ஆம் பேருந்து வெஸ்ட் ஹேம்ஸ்பெட்டில் ஸ்டாப்பில் சென்ற போதுதான் இது நடந்ததாக தற்போது வழக்குப் பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
 
ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு நடந்த தாக்குதல் சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளாது.