1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : புதன், 29 ஜனவரி 2020 (15:48 IST)

இஸ்ரேல் – பாலஸ்தீன பிரச்சினை: ஐடியா மணியாக களம் இறங்கிய ட்ரம்ப்!

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டு காலமாக தொடர்ந்து வரும் யுத்தத்தை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய திட்டம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.

இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே பல ஆண்டுகளாக தங்கள் சொந்த நாட்டுக்கான போர் நடந்து வருகிறது. முக்கியமாக யூதர்களுக்கும், பாலஸ்தீனியர்களுக்கும் பொது புனித தலமாக விளங்கும் ஜெருசலேம் மீது இரு தரப்பிலும் ஆதிக்கம் செலுத்த பெரும் யுத்தம் நடந்து வருகிறது. ஜெருசலேம் யாருக்கு என்பதே போரின் மையமாக உள்ளது.

இந்நிலையில் இந்த பிரச்சினைகளுக்கு முடிவுக்கட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புதிய யோசனை ஒன்றை கூறியுள்ளார். அதன்படி இஸ்ரேல் தங்களது குடியேற்றத்தை நான்கு ஆண்டுகளுக்கு நிறுத்தி வைக்க வேண்டும். மேலும் கிழக்கு ஜெருசலேமை தலைநகராக கொண்டு பாலஸ்தீனம் அமைக்கப்பட வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் அதிபர் ட்ரம்பின் இந்த திட்டம் இஸ்ரேலியர்களுக்கு நன்மையளிப்பதாக உள்ளதாக பாலஸ்தீனம் கருத்து தெரிவித்துள்ளது. ட்ரம்பின் கருத்துக்கு பாலஸ்தீன ஆதரவு நாடுகளும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.