செவ்வாய், 30 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 16 ஜூன் 2021 (15:50 IST)

ஆம்புலன்ஸை திருடிச் சென்ற நபர்....என்ன செய்தார் தெரியுமா?

ஆம்புலன்ஸை திருடி ஒரு நபர் மருத்துவனைக்குச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க நாட்டில் வசித்து வரும் ஒரு இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.

பின்னர், ஆம்புலன்ஸ் ஓட்டுநர் இதுகுறித்து போலீஸார் கொடுத்ததை அடுத்து, விசாரணை மேற்கொண்டனர். இதில், இளைஞர் தனக்கு நெஞ்சு வலி ஏற்பட்டத்தைத் தொடர்ந்து  சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட ஆம்புலன்ஸை எடுத்துக் கொண்டு அவராகவே மருத்துவமனைக்குச் சென்றுள்ளதாகக் கூறியுள்ளார்.