1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Suresh
Last Updated : வெள்ளி, 29 ஜனவரி 2016 (20:28 IST)

மசூதியில் குண்டு வெடிப்பு-துப்பாக்கி சூடு: சவுதி அரேபியாவில் 3 பேர் உயிரிழப்பு

சவுதி அரேபியாவிலுள்ள மஹசென் நகரிலுள்ள மசூதியில் குண்டு வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.


 

 
சவுதி அரேபியாவிலுள்ள மஹசென் நகரில் இமாம் ரிடா ஷியா பிரிவு மசூதி உள்ளது. இந்த மசூதியில் ஜும்மா தொழுகையில் பங்கேற்க ஏராளமானோர் திரண்டனர்.
 
அப்போது மசூதியில் மனிதகுண்டு வெடித்துச் சிதறியது. இந்த வெடிகுண்டு சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் 10 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
 
இந்நிலையில், அந்த மசூதியில் சிலர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கூறப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.