தொடர்புடைய செய்திகள்
- குவைத்தில் பயங்கர தீ விபத்து.! 5 இந்தியர்கள் உட்பட 43 பேர் பலி..!
- ‘நான் எய்ட்ஸ் நோயால் இறந்துவிட்டதாக வதந்தி கிளப்பிட்டாங்க’ – நடிகர் மோகன் பகிர்ந்த அதிர்ச்சி தகவல்!
- நாடாளுமன்றத்தில் உள்ள மகாத்மா காந்தி, அம்பேத்கர் சிலைகள் அகற்றப்படுகிறதா? அதிர்ச்சி தகவல்..!
- வெற்றி பெறுவாரா விஜய பிரபாகரன்..? கருத்துக்கணிப்பில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!
- ஒடிசா முதல்வரின் உடல்நிலை சீர்குலைந்து வருவதற்கு பின் சதி: பிரதமர் மோடி அதிர்ச்சி தகவல்..!
குவைத் தீ விபத்து.! பலியான 40 பேரும் இந்தியர்கள்.! அதிர்ச்சி தகவல்...!
குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் 40 இந்தியர்கள் பலியானதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. இந்த தீ விபத்தில் மொத்தம் 53 பேர் உயிரிழந்துள்ளனர்.
தெற்கு குவைத்தில் உள்ள மங்காப் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. தீ குடியிருப்பு முழுவதும் பரவியதால், அங்கிருந்தவர்கள் உடனடியாக வெளியேற முயன்றனர். இருப்பினும் தீ விபத்தில் பலர் சிக்கிக் கொண்டனர்.
தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பல மணி நேரம் போராடி சித்தியை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில் ஐந்து இந்தியர்கள் உட்பட 43 பேர் பலியானதாக முதலில் தகவல் வெளியானது.
இந்நிலையில் தீ விபத்தில் இதுவரை 53 பேர் உயிரிழந்துள்ளதாகவும், அதில் 40 பேர் இந்தியர்கள் என்றும் அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்து ஏற்பட்ட கட்டிடம் கேரளாவை சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என்றும் அங்கு இந்திய தொழிலாளர்கள் தங்கியிருந்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தீ விபத்தில் சிக்கிய தமிழர்களின் நிலை குறித்து இந்திய தூதரகத்திடம் அயலக தமிழர் நலத்துறை தகவல் கேட்டுள்ளது.
குவைத் தீ விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டுள்ளார்.
அடுத்த கட்டுரையில்
