வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: திங்கள், 7 அக்டோபர் 2019 (13:03 IST)

ஐ.நா அமைதி தூதர்களை வேட்டையாடும் மாலி போராளிகள்! – அதிர்ச்சியில் அமெரிக்கா!

மாலி பகுதியில் அமைதியை ஏற்படுத்துவதற்காக செல்லும் ஐ.நா சபை அமைதி தூதர்களை மாலி போராளிகள் தொடர்ந்து வேட்டையாடி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாலி நாட்டை ஜிகாதி போராளி குழு கைப்பற்ற முயற்சித்து வருகிறது. கடந்த 2012ல் வடக்கு மாலியை கைப்பற்றியபோது பிரான்ஸ் படைகளால் அவர்கள் துரத்தியடிக்கப்பட்டனர். அடிக்கடி போராட்டங்களிலும், குண்டு வெடிப்பு சம்பவங்களிலும் ஜிகாதிகள் ஈடுபட்டு வருவதால் மாலி நாட்டின் அமைதி சீர்குலைந்துள்ளது. இந்நிலையில் சமீபத்தில் அங்கு அமைதியை நிலைநாட்ட சென்ற நல்லெண்ண அமைதி குழு தூதுவர் ஒருவர் கார் குண்டு வெடித்து இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த வருடத்தில் ஐ.நா தூதர்கள் ஜிகாதிகளால் மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.