வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 28 ஜனவரி 2017 (12:34 IST)

சடலத்துக்கு மேக்அப் போட்டு பண்டிகை கொண்டாடும் மக்கள்!!

இறந்தவர்களை தோண்டியெடுத்து, சடலத்துடன் அன்பை பரிமாறிக்கொள்ளும் விநோத பண்டிகை இந்தோனேஷியாவில் நடைபெறுகிறது.


 
 
இந்தோனேஷியாவின் சுலவேசி தீவுப்பகுதியில் வசித்து வரும் தோஜாரன்ஸ் இன மக்கள் பெரிதும் வெளியே தெரியப்படாதவர்கள். இந்த இனத்து மக்களை பற்றிய முழு விவரம் அந்நாட்டு மக்களுக்கே முழுமையாக தெரியாது.
 
தோஜாரன்ஸ் இன மக்கள், தங்களது குடும்ப உறுப்பினர்கள் அல்லது உறவினர்கள் யாரேனும் இறந்துவிட்டால், அவர்களது உடலை தோண்டி எடுத்து, அதற்கு புதிய ஆடை உடுத்தி, அழகு ஒப்பனைகள் செய்து பண்டிகை கொண்டாடுகின்றனர்.
 
ஒரு நபர் இறந்த 3 வருடங்களுக்கு பின்னர் இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த மக்களுக்கு இறப்பு என்ற ஒன்று கிடையாது. நாங்கள் அனைவரும் எப்போது ஒற்றுமையுடன் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு தான் இருக்கிறோம் என்பதற்காகவே இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.