1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Modified: திங்கள், 26 மார்ச் 2018 (08:42 IST)

பிரபல வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலி

ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள ஷாப்பிங் மாலில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 37 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று விடுமுறை நாள் என்பதால் ரஷியாவின் சைபீரியா மாகாணத்தில் உள்ள பிரபல ஷாப்பிங் மாலில் பொதுமக்கள் பலர் ஆர்வமுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருந்தனர். யாரும் எதிர்பாரா விதமாய் திடீரென அந்த மாலில் தீ விபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு குவிந்திருந்த மக்கள் அலறியடித்தபடி அங்குமிங்கும் ஓடினர். 
 
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத் துறையினர், 12 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். மேலும் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். 5 பேர் சம்பவ இடத்திலே பலியாகிய நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 32 பேர் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் பலர் தீவிர சிக்கிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.