1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : புதன், 29 மார்ச் 2017 (19:37 IST)

கோக் குளிர்பான பாட்டிலில் மனித கழிவு: வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

வெளிநாட்டு குளிர்பான கோக் பாட்டிலில் மனித கழிவுகள் இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


 

 
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது கோக், பெப்சி போன்ற அயல்நாட்டு குளிர்பான பானங்களுக்கு எதிர்ர்பு அதிகரித்து. தற்போது கோக், பெப்சி குளிர்பானங்கள் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
 
இந்நிலையில் அயர்லாந்து நாட்டில் கோக், பெப்சி ஆலையில் டின்களில் குளிர்பானம் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது டின்களில் மனித கழிவுகள் இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர். 
 
இதில் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர், அதன்பின்னர் ஆலை மூடப்பட்டது. காவல்துறைக்கு புகார் தெரிவிகப்பட்டு இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது.
 
மேலும் இச்சம்பவம் அயர்லாந்து நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.