வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Abimukatheesh
Last Updated : சனி, 15 அக்டோபர் 2016 (17:11 IST)

ஃபேஸ்புக்கில் முத்தமிடும் புகைப்படம்: ஓரின சேர்க்கை ஜோடி கைது

இந்தோனேசியாவில் ஓரின சேர்க்கை ஜோடி, அவர்கள் முத்தமிட்ட படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டதால் கைது செய்யப்பட்டனர்.


 

 
இந்தோனேசியாவில் ஓரினசேர்க்கை சட்டவிரோதமான செயல் கிடையாது. ஆனால் ஆபாச படங்கள் வெளியீட்டை தடுப்பதற்கும், இணையதளங்களை நிர்வகிக்கவும் கடுமையான சட்டங்கள் உள்ளன.
 
இந்நிலையில் ஓரின சேர்க்கை ஜோடி ஒன்று, அவர்கள் முத்தமிடும் புகைப்படத்தை சமூக வலைத்தளமான ஃபேஸ்புக்கில் வெளியிட்டனர். அந்த புகைப்படத்திற்கு ஃபேஸ்புக்கில் பல்வேறு தரப்பினரால் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
 
இதுதொடர்பாக ஃபேஸ்புக் நிறுவனத்திடம் தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுடபத்துறை புகார் செய்தது. அதன் அடிப்படையில் அந்த புகைப்படம் ஃபேஸ்புக்கில் நீக்கப்பட்டது.
 
இதனிடையே அந்த ஜோடி யார் என்று தெரியவந்தது. உடனே காவல்துறையினர் அவர்களை கைது செய்தனர்.