வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Caston
Last Modified: திங்கள், 7 மார்ச் 2016 (17:40 IST)

மெஸ்ஸி-ரொனால்டோ பற்றி குடித்துவிட்டு விவாவதம்: நண்பனை கொன்ற விபரீதம்

மெஸ்ஸி-ரொனால்டோ பற்றி குடித்துவிட்டு விவாவதம்: நண்பனை கொன்ற விபரீதம்

மும்பையில் நைஜீரியாவை சேர்ந்த கால்பந்து ரசிகர்கள், லியோனல் மெஸ்ஸி மற்றும் கிறிஸ்டியானோ ரொனால்டோ பற்றி விவாவதம் செய்தனர். இதில் 34 வயதான நைஜீரியர் ஒருவர் சகநாட்டு நண்பரால் கொலை செய்யப்பட்டுள்ள அதிர்ச்சி சம்பவம் நிகழ்ந்துள்ளது.


 
 
இவர்கள் குடித்துவிட்டு காரசாரமாக மெஸ்ஸி மற்றும் ரொனால்டோ பற்றி விவாதித்ததாகவும், விவாதத்தின் போது ஆத்திரமடைந்த ஒருவர் தனது நண்பரை கொன்றதாகவும் கூறப்படுகிறது.
 
இந்த சம்பவம் மும்பையில் உள்ள நலசோபர கிழக்கு பகுதியில் உள்ள ஓஸ்வாலும் நகரி உள்ள மகேஷ் கட்டிடத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை நடந்துள்ளது.
 
சனிக்கிழமை இரவு பாதிக்கப்பட்ட அந்த நபரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடந்துள்ளது. இந்த மது விருந்தில் கொலை செய்யப்பட்ட ஒபின்னாவும் கொலை செய்த மிக்கேலும் இருந்தனர். இந்த நிகழ்வு மறுநாள் காலை 9 மணி வரை நீடித்துள்ளது.
 
அப்பொழுது அந்த கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பால்கனியில் இருவரும் கால்பந்து விளையாட தொடங்கினர். இருவரும் குடித்திருந்ததால் விளையாட்டின் இடையே லியோனல் மேஸ்ஸி, கிறிஸ்டியானோ ரொனால்டோ இருவரில் யார் பெரியவர் என்ற வாக்குவாதம் நடந்தது.
 
அப்பொழுது மிக்கேல் காலி பாட்டிலை எடுத்து ஒபின்னாவை நோக்கி வீசியுள்ளார். அது அவர் மீது படாமல் சுவரில் பட்டு உடைந்தது. உடைந்த கண்ணடி துண்டை எடுத்து மிக்கேல் ஒபின்னாவின் கழுத்தில் அறுத்துள்ளார். சம்பவ இடத்திலேயே ஒபின்னா இறந்தார்.
 
ஒபின்னாவின் அலறல் சத்தத்தை கேட்டு அந்த பகுதியில் உள்ளவர்கள் காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். காவல் துறையினர் நான்காவது மாடியில் இருந்த மிக்கேலை கைது செய்தனர்.