1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bala
Last Modified: புதன், 22 ஜூன் 2016 (18:30 IST)

களை கட்ட தொடங்கியது நாய் இறைச்சி திருவிழா

சீனாவில் வருடம் தோறும் நடைபெறும் நாய் இறைச்சி திருவிழா தொடங்கியது.



சீனாவின் யூலின் பகுதியில் வருடம் தோறும் நாய் இறைச்சி திருவிழா நடைபெறுவது வழக்கம். இந்த விழா இன்று அப்பகுதியில் தொடங்கியது. சுமார் 10 நாட்கள் நடைபெறும் விழாவின்போது 10000க்கும் மேற்பட்ட நாய்களை இறைச்சிக்காக கொல்லப்படுகிறது என தெரிகிறது.

இந்த விழாவிற்கு உலகெங்கும் வாழும் மிருகவதை எதிர்ப்பாளர்கள் தங்களது எதிப்புகளை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. இது குறித்து அப்பகுதி அரசு அதிகாரிகள் கூறுகையில், இந்த விழா தனியாரால் நடத்தப்படுவதால் எங்களால் எதுவும் செய்ய இயலாது என கை விரித்தனர்.

தற்போது இந்த விழா தொடங்கியதால் பல பகுதிகளிலிருந்தும் நாய்களை அழைத்து மக்கள் குவியத் தொடங்கியுள்ளனர்.