சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: வியாழன், 7 ஜூலை 2016 (13:36 IST)

நடக்கப் போகும் தாக்குதலுக்கு முன்னோட்டம் டாக்கா: ஐ.எஸ். அதிரடி மிரட்டல்

வங்காளதேச தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல ஓட்டலுக்குள் வெள்ளிக்கிழமை இரவு தீவிரவாதிகள் புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினார்கள். 


 

 
இதில் பிணையக்கைதிகள் 20 பேர், இரண்டு பாதுகாப்பு படை வீரர்கள் மற்றும் 6 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். ஒரு தீவிரவாதி உயிருடன் பிடிக்கப்பட்டான். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.   அந்நாட்டின் வரலாற்றில் இதுதான் மிகவும் கொடூரமான தீவிரவாத தாக்குதல். இந்த தாக்குதலால் அந்த நாடு கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளது.
 
இந்நிலையில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு வெளியிட்டுள்ள வீடியோவில், சமீபத்தில் டாக்காவில் நடந்த தாக்குதல், வருங்காலத்தில் நடக்கப் போகும் தாக்குதல்களுக்கான சிறிய முன்னோட்டம்தான் என்று மிரட்டல் விடுத்துள்ளது. சிரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள அந்த வீடியோவில் தோன்றும் நபர் வங்காளம் மற்றும் ஆங்கில மொழியில் பேசியுள்ளார். 
 
அந்த வீடியோவில் ”ஷரியா உலகம் முழுவதும் நிலைநிறுத்தப்படும் வரை தாக்குதல் தொடரும்” என்று மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.