1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By siva
Last Updated : வியாழன், 9 டிசம்பர் 2021 (13:32 IST)

நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்த கார்: 60 வயது பெண் பிணமாக மீட்பு!

நயாகரா நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று தவறி விழுந்ததை அடுத்து அந்த காரில் இருந்த 60 வயது பெண் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டது என தகவல் வெளியாகி உள்ளது. 
 
நயாகரா நீர்வீழ்ச்சி அருகே கார் ஒன்று நிறுத்தப்பட்டு இருந்ததாகவும் அப்போது இரவில் பனி அதிகமாகி அதில் வழுக்கி கொண்டு கார் நீர்வீழ்ச்சியில் விழுந்தததாகவும் கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் கார் ஒன்று மிதந்து கொண்டிருப்பதை கண்டதும் உடனடியாக அமெரிக்க ராணுவத்தினர் ஹெலிகாப்டர் மூலம் அந்த காரை வெளியே எடுத்தனர்
 
அதில் அறுபது வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிணத்துடன் பிணமாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கார் எப்படி நயாகரா நீர்வீழ்ச்சியில் விழுந்தது என்பது குறித்து விசாரணை நடந்து வருவதாக அமெரிக்க காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.