வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By K.N.Vadivel
Last Updated : வெள்ளி, 31 ஜூலை 2015 (04:45 IST)

அப்துல் கலாமிற்கு அஞ்சலி செலுத்திய இலங்கை அதிபர் சிறிசேனா

முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமிற்கு, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா அஞ்சலி செலுத்தினார்.
 

 
முன்னாள் இந்திய குடியரசு தலைவர் டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி, இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனா கொழும்பிலுள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றார். அங்கு வைக்கப்பட்டிருந்த டாக்டர் அப்துல் கலாமின் படத்திற்கு மவுன அஞ்சலி செலுத்தினார். மேலும், அங்கிருந்த சிறப்பு பதிவேட்டில் தனது இரங்கல் செய்தியை மிகவும் வேதனையுடன் பதிவு செய்தார்.
 
அத்துடன், டாக்டர் அப்துல் கலாமின் மறைவையொட்டி, தனது அனுதாபச் செய்தியை இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடம் அளிக்க,  இலங்கை அரசின், இந்து சமய விவகாரத்துறை அமைச்சர் சுவாமிநாதனை அனுப்பி வைத்தார்.