1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Updated : வியாழன், 4 ஆகஸ்ட் 2016 (13:02 IST)

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

நாடு விட்டு நாடு சென்று ஏமாந்து போன காதலன்: மருத்துவமனையில் அனுமதி

நெதர்லாந்தைச் சேர்ந்தவர் அலெக்ஸ்சாண்டர் பீட்டர்(41). இவருக்கும் சீனாவைச் சேர்ந்த ஜாங்(26) என்ற பெண்ணுக்கும் சமூக வலைத்தளம் மூலம் காதல் ஏற்பட்டுள்ளது. பின்னர், ஜாங்கை சந்திக்க சீனா வருவதாக பீட்டர் கூறியுள்ளார். அதற்கு ஜாங்கும் ஒப்புக்கொண்டார். இதை அடுத்து, பீட்டர் நெதர்லாந்தில் இருந்து விமானம் மூலம் 4500 கிலோ மீட்டர் கடந்து சீனா வந்து சேர்ந்தார்.


 


ஆனால், ஜாங் விமான நிலையத்தில் இல்லை, பீட்டர் ஜாங்கை தொடர்பு கொள்ளவும் முடியவில்லை. காதலி வருவார் என்ற நம்பிக்கையில், பீட்டர் விமானநிலையத்திலேயே காத்துகிடந்தார். 10 நாட்கள் கடந்தும் ஜாங் வரவில்லை, பீட்டரின் உடல்நிலை மோசமானது தான் மிச்சம். பிறகு, விமான நிலைய ஊழியர்கள் பீட்டரை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். தொலைக்காட்சி மூலமாக பீட்டர்  சீனாவில் இருப்பதை ஜாங் தெரிந்துக்கொண்டுள்ளார். ஆனால், ஜாங் இன்னும், அவரை வந்து சந்திக்கவில்லை.