1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 29 ஜனவரி 2023 (14:32 IST)

சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் அனுமதி

nabadas
சுகாதாரத்துறை அமைச்சர் மீது துப்பாக்கிச்சூடு: மருத்துவமனையில் அனுமதி
ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டதை அடுத்து அவர் படுகாயம் அடைந்ததாகவும் இதனை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
 
 ஒடிசா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் நபா தாஸ் என்பவர் ஜர்சுவாடா என்ற மாவட்டத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது திடீரென மர்ம நபர்கள்  துப்பாக்கி சூடு நடத்தினார்கள். 
 
இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தை அடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் நபாதாஸ் படுகாயம் அடைந்த நிலையில் அவர் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேரி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
 
சுகாதாரத்துறை அமைச்சர் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தி உள்ளதை அடுத்து ஒடிசாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
Edited by Siva