1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (22:03 IST)

காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுபோட்ட காதலிக்கு 9 மாதம் சிறை

முன்னாள் காதலியுடன் இரவில் தங்கியதால், காதலனின் பிறப்பு உறுப்பில் சூடுவைத்த இளம்பெண்ணிற்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் 9 மாத சிறை தண்டனை விதித்துள்ளது.
 
ஆஸ்திரேலியாவின் அடி­லெயிட் மாகாணத்தின் மேற்­குப் பகுதியில் அமைந்துள்ள மவுண்ட் பார்க்கர் பகுதியைச் சேர்ந்த புரான்வென் ஜாய் பார்க்கர் (22) என்ற இளம்பெண், தனது காதலர் அவ­ர­து ­முன்னாள் காத­லி­யுடன் இரு இர­வு­களைக் கழித்­த­தை­ அறிந்து கோபமடைந்துள்ளார்.
 
இதனால், இருவருக்குமிடையே கடும் வாக்­கு­வா­தத்தில் நிகழ்ந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த இளம்பெண், தலைமுடியை நேராக்­கு­வ­தற்குப் பயன்­படும் உப­க­ர­ணத்தால் காத­லரின் பிறப்­பு­றுப்பை சுடப் போவ­தாக கூறி­யுள்ளார். தனது காத­லியின் கோபத்தைத் தணிக்க வேறு வழி தெரி­யாத காதலர் அதற்கு சம்­ம­தித்­துள்ளார்.
 
பின்னர், இந்த சம்பவம் குறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். நீதிமன்றத்தில் அளித்துள்ள புகாரில், காதலி வைத்த சூட்டால் பிறப்­பு­றுப்பில் தீக்காயம் ஏற்­பட்­டுள்ள­துடன், அதன் செயல் திறனும் பாதிக்­கப்­பட்டுள்ளதாக காதலர் தெரிவித்துள்ளார்.
 
ஆனால், இது குறித்து நீதிமன்றத்தில் விளக்­க­ம­ளித்த ஜாய் பார்க்கர், தனது காத­லரின் செயலினால் ஆத்திரமடைந்ததாகவும், அதனால் அவ­ருக்கு எச்­ச­ரிக்கை செய்யவே அவ்வாறு செயல்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
 
மேலும், இது இவ்வளவு தூரம் விப­ரீ­த­மாக போய் முடியும் என்று  தான் நினைக்­க­வில்லை எனவும் தெரி­வித்துள்ளார். வழக்கை விசாரித்த நீதிபதி மஸ்கட், இளம்பெண்ணுக்கு 9 மாத சிறைத் தண்டனையை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.
 
தாலி அணியாமல் இருப்பது பெண்களின் சுதந்திரம்: குஷ்பு பேச்சு