எகிப்தில் கட்டிடம் இடிந்து 2 பேர் பலி
எகிப்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
எகிப்தின் அசியூட் மாகாணத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த அடுக்குமாடி கட்டிட உரிமையாளரின் மனைவி, அவரது ஒன்றரை வயது குழந்தை என 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமான கட்டிட நீட்டிப்பே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது.
எகிப்தில் கடந்த ஆண்டு மாத்திரியா மாவட்டத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.