வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Bharathi
Last Modified: வியாழன், 10 செப்டம்பர் 2015 (15:14 IST)

எகிப்தில் கட்டிடம் இடிந்து 2 பேர் பலி

எகிப்தில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் குழந்தை உள்பட 2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
 
எகிப்தின் அசியூட் மாகாணத்தில் உள்ள 5 மாடி கட்டிடம் ஒன்று திடீரென சீட்டுக் கட்டு போல சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த அடுக்குமாடி கட்டிட  உரிமையாளரின் மனைவி, அவரது  ஒன்றரை வயது குழந்தை என  2 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 


 
 
இடிபாடுகளுக்குள் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணியும் துரித கதியில் நடைபெற்று வருகிறது. சட்டவிரோதமான கட்டிட நீட்டிப்பே விபத்துக்கு காரணம் என்பது விசாரணையில் தெரியவந்தது. 
 
எகிப்தில் கடந்த ஆண்டு மாத்திரியா மாவட்டத்தில் 8 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் 19 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.