1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Dinesh
Last Modified: திங்கள், 22 ஆகஸ்ட் 2016 (10:02 IST)

’சோகம்’ - உலக அழகிப்போட்டிக்கு தேர்வான 17 வயது பெண் மரணம்

’சோகம்’ - உலக அழகிப்போட்டிக்கு தேர்வான 17 வயது பெண் மரணம்

கடந்த ஆகஸ்ட் மாதம் 7ம் தேதி நடந்த உலக அழகிப்போட்டிக்கு ஆஸ்திரேலியா சார்பாக எலிசி மில்லர் கென்னடி என்ற பெண் தேர்வானார்.


 


17 வயதான அவர், குயின்ஸ்லேண்டில் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார். இந்நிலையில், அவர் ஏழைகளுக்கு உதவி செய்வதற்கான நிதியை திரட்ட 20 வயது நண்பருடன் காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார் இவரது காரின் மீது பலமால மோதியது.

இதில் எலிசா பலத்த காயமடைந்து நினைவிழந்தார். உடனே அவரை ஹெலிகாப்டர் மூலமாக கேர்ன்ஸ் பேஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி அவர் மரணமடைதார். அவருக்கு ஆஸ்திரேலிய நாடே கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.