1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. உலக ‌சி‌னிமா
Written By Abimukatheesh
Last Modified: வெள்ளி, 12 மே 2017 (16:12 IST)

விவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி

விவாகரத்து கோரிய பின் டேட்டிங் செல்லும் ஏஞ்சலினா ஜோலி
ஏஞ்சலினா ஜோலி தனது கணவர் பிராட் பிட் உடன் 7 மாதங்களுக்கு பிறகு மீண்டும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறார்களாம்.


 

 
ஹாலிவுட் சினிமாவில் அதிரடி நாயகி ஏஞ்சலினா ஜோலி - பிராட் பிட் ஆகியோர் சிறந்த தம்பதிகளாக திகழ்ந்து வந்தனர். இதையடுத்து கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அதன்பிறகு இருவரும் பிரிந்து வாழ தொடங்கினர்.
 
7 மாதங்களும் தற்போது இருவரும் டேட்டிங்கில் ஈடுப்பட்டு வருகிறாராம். குழந்தைகள் தற்போது இருவரின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அடிக்கடி நேரில் சந்திக்கொள்வதும், தினமும் போனில் உரையாடியும் வருகிறார்களாம். இதனால் இவர்கள் மீண்டு இனைந்து வாழ வாய்ப்புள்ளது.
 
இதையடுத்து இவர்களின் விவாகரத்து குறித்து விரைவில் ஒரு முடிவு தெரியவரும்.