கேரளாவில் பயங்கர நிலச்சரிவு: 3 குழந்தைகள் உள்பட 7 பேர் பலி

வெள்ளி, 15 ஜூன் 2018 (07:34 IST)
கேரளவில் சமீபத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் மாநிலம் முழுவதும் நல்ல மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் கேரளாவில் உள்ள கோழிக்கோடு தாமரஞ்சேரி என்ற பகுதியில் ஏற்பட்ட திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் சிக்கி பரிதாபமாக பலியாகியுள்ளதாக திடுக்கிடும் செய்திகள் வெளிவந்துள்ளது 
 
நிலச்சரிவு குறித்த தகவல் அறிந்தவுடன் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நிலச்சரிவு நிகழ்ந்த பகுதியில் 3 குழந்தைகள் உட்பட 7 பேரை காணவில்லை என்றும், அவர்களை தேடும் பணியில் மீட்பு பணியினர் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. 
 
அதுமட்டுமின்றி இந்த நிலச்சரிவால் சுமார் 300 வீடுகள் மண்ணில் மூழ்கியுள்ளதாகவும், அந்த இடிபாடுகளில் யாராவது சிக்கியுள்ளார்களா? என்பது குறித்து தீயணைப்புத்துறையினர் மீட்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன.

எல்லாம் காட்டு

நீ ஒரு பைத்தியம்!. நான் மட்டும் இல்லனா நீ ஜெயில்ல இருப்ப!.. நெதன்யாகுவிடம் கோபம் காட்டிய டிரம்ப்!...

சாதி மதம் பார்த்துதான் சீட்டே கொடுத்தீங்க!. நீங்க சாதி மதத்தை ஒழிச்சிட்டீங்களா?!...

பாஜகவிலிருந்து விலகினார் அண்ணாமலை!.. டெல்லியில் ராஜினாமா கடிதம் கொடுத்தார்.

முதல்வர் விஜய்யை போலவே அண்ணாமலையை சந்திக்கவும் நேரம் ஒதுக்காத அமித்ஷா? உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை

ஸ்டாலினுக்கு நெருக்கமான ப.சிதம்பரம், முதல்வர் விஜய்யுடன் சந்திப்பு? தமிழக அரசியலில் பரபரப்பு

அடுத்த கட்டுரையில்
Show comments