1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (15:34 IST)

கொஞ்ச நாள் ரெஸ்ட் விட்டா எல்லாரும் என்ன ஓவர் டேக் பண்றாங்க… மீண்டும் களத்தில் இறங்கிய யாஷிகா!

பிரபல நடிகையான யாஷிகா ஆனந்த் தனது கவர்ச்சிகரமான புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவேற்றியுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் யாஷிகா ஆனந்த். அடல் காமெடி படமான அதில் யாஷிகா மிரட்டலாக நடித்துஇருந்தார். அதன்பின்னர் சில படங்களில் நடித்துக்கொண்டிருந்த யாஷிகா பிக்பாஸ் சீசன் இரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியின் இறுதிசுற்று வரை வந்த யாஷிகா அதன் மூலம் புகழ் பெற்றார்.

சமூகவலைதளங்களில் மிகவும் ஆர்வமாக இருக்கும் அவர் தனது புகைப்படங்களை அதிகளவில் பகிர்ந்து வந்தார். அவை அனைத்தும் மிகவும் கவர்ச்சியாகவே இருப்பதால் பெருமளவில் அவருக்கு பாலோயர்ஸ்கள் எண்ணிக்கை கிடைத்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெரிதாக புகைப்படங்களை பகிராத அவர் இப்போது உச்சபட்ச கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.