1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 18 டிசம்பர் 2021 (16:42 IST)

பாலா சூர்யா படத்தில் இணையும் தமிழ் எழுத்தாளர்!

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணன் பாலாவின் அடுத்த படத்துக்கு வசனம் எழுதி வருகிறாராம்.

இயக்குனர் பாலாதான் தமிழ் சினிமாவில் சூர்யாவுக்கு என்று நந்தா படத்தின் மூலமாக ஒரு அடையாளத்தைக் கொடுத்தார். அதன் பின்னர் அவர் இயக்கிய பிதாமகன் படத்திலும் சூர்யாவுக்கு ஒரு முக்கியமான வேடத்தைக் கொடுத்து அவரிடம் இருந்த நகைச்சுவை நடிப்பையும் வெளிக்கொண்டு வந்தார். இதனால் சூர்யா தனது சினிமா காட்பாதராக பாலாவை நினைத்து வந்தார். இப்போது பாலாவுக்கு சினிமாவில் போதாத காலம் என்பதால் அவருடைய இயக்கத்தில் நடிக்க சம்மதித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் அந்த படத்தை தயாரிக்கவும் உள்ளாராம். இந்த படத்துக்கான வேலைகள் இப்போது பிஸியாக நடந்துகொண்டிருக்கும் நிலையில் படத்துக்கான வசனத்தை எழுதும் பொறுப்பை இயக்குனர் விஜி ஏற்றுள்ளதாக சொல்லப்பட்டது.

ஆனால் இப்போது எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனும் இந்த படத்தின் திரைக்கதை மற்றும் வசனத்தில் பங்களித்து வருவதாக சொல்லப்படுகிறது.